விரும்பும் பதிவைத் தேடுக !

ஊர்ந்தான் வகைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊர்ந்தான் வகைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ஊர்ந்தான் வகைய கலினமா- பாடல்.73 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (73)

--------------------------------

ஊர்ந்தான் வகைய கலினமாநேர்ந்தொருவன்

ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட

குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்

வளத்தனைய வாழ்வார் வழக்கு.

 

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

பதி நன்று பல்லார் உறையின்; ஒருவன்

மதி நன்று மாசு அறக் கற்பின்; – நுதி மருப்பின்.

ஏற்றான் வீறு எய்தும் இன நிரை; தான் கொடுக்கும்

சோற்றான் வீறு எய்தும் குடி.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

கடிவாளம் பூட்டிய குதிரைகள் அவற்றில் ஏறிச் செலுத்துபவரது திறமையைப் பொறுத்து இயங்கும் !

 

ஒரு மனிதன் செய்யும் அறச் செயல்கள், அவனது செல்வ வளத்தின்  திறத்துக்கு ஏற்பச் செழுமை பெறும் !

 

குளத்தின் ஆழ அகலத்தின் திறத்துக்கு ஏற்பவே, அதிலிருந்து வெளியேறும் நீர்க்காலின் மதகும் அமையும் !

 

இல்வாழ்வாருடைய வாழ்க்கைச் செயல்கள் அவரவரது வருவாய்ச் செழுமைக்கு ஏற்பவே அமையும் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

கலினமா = கடிவாளம் பூட்டிய குதிரைகள் ; ஊர்ந்தான் வகைய = அவற்றை ஏறிச் செலுத்துவானது திறத்துக்கு ஒத்தன ; அறம் செய்கை = அறச் செயல்கள் ; நேர்ந்த ஒருவன் = இசைந்த ஒருவனது ; ஆற்றல் வகைய = ஆற்றலைப் பொறுத்தன ; தூம்பின் அகலங்கள் = நீர்க்காலின் பரப்புகள் ; தொட்ட = தோண்டப்பட்ட ; குளத்து அனைய = குளங்களின் அளவின ; வாழ்வார் வழக்கு = இல்வாழ்வாருடைய வாழ்க்கைச் செய்கைகள் ; தத்தம் வளத்து அனைய = அவரவரது வருவாய்ச் செழுமையை ஒத்தன.

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

குதிரைகள் சவாரி செய்வானது திறத்துக்கு ஒத்தன ; ஒருவனது அறச் செயல்கள் அவன்றன் ஆற்றலைப் பொறுத்தன ; நீர்க்காலின் அகலங்கள் குளத்தின் அளவின ; இல்வாழ்வார் வாழ்க்கைகள் அவரவர் வருவாய்ச் செழுமையை ஒத்தன.

 

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{12-12-2021}

----------------------------------------------------------------------------------------------